டெல்லி: சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உரு  படத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, மாநிலங்களவை தலைவர் தங்கர்  உள்பட மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மலை செய்தனர்.

அம்பேர்கர் பிறந்தநாளையொட்டி,  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் உருவ சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்க கீழே அவரது உருவப்படமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  இந்த படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பாபா சாகேப்  அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்னா ஸ்தலத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

இதனிடையே அம்பேத்கர் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், அம்பேத்கரின் கொள்கை, லட்சியங்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வலிமையை அளிக்கும். அம்பேத்கரின் உத்வேகத்தால் நாடு சமூக நீதிக்கான கனவை நனவாக்க அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.