சென்னை: அரசியல் பொதுக்கூட்டங்கள் , ரோடு ஷோக்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவது என்றும், பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன்பே அனுமதி கோர வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் தொடர்பாக விதிகளை வகுக்கும் வகையில் தலைமை செயலாளர் தலைமையில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விசிக உள்பட சில கட்சிகள் ரோடு ஷோ நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத்தொடர்ந்து, அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது. மேலும் பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளை கண்காணிக்க குழு அமைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலும், பொதுக்கூட்டங்களின்போது, மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டத்தில் போலீசாரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும், பொதுக்கூட்டங்களை கண்காணிக்க மற்றும் அனுமதி வழங்க குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் நிகழ்ச்சிக்கு முன் 2மணி நேரத்திற்கு மேல் மக்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களை 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்த 10 நாட்களுக்கு முன்பும் 15 நாட்களுக்கு மிகாமல் அனுமதி கோர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய, ஆலந்தூர் பாரதி, “அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் நானும் என்.ஆர். இளங்கோவன் பங்கேற்று பேசினோம். அம்பேத்கர் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் பேச்சு, எழுத்து உரிமை வேண்டும் என கூறினார். ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாக கூடும் உரிமை அனைவருக்குமே உள்ளது. நீதிமன்ற பரிந்துரைகள் ஏற்ற வகையில் இருக்க வேண்டும். ரோடு ஷோ நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த கண்டிஷன் போட்டாலும், அடிப்படை உரிமைகளை மீறாமல் இருக்க வேண்டும்.
இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து பின்னர் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும், மேலும் ஏதேனும் மாற்றம் இருந்தால் திருத்தப்படும்” என்று அவர் கூறினார். ‘