டெல்லி

ரும் 30 ஆம் தேதி முதல் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகிறது.

பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். இற்தியாக கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒலிபரப்பான நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, இந்தியாவின் பிரதமராக 3-வது முறை மோடி பதவியேற்றுள்ள நிலையில், வரும் 30-த்தேதி முதல் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாக உள்ளது. ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளெ

அதில்.

“தேர்தல் காரணமாக சில மாத இடைவெளிக்குப் பிறகு, ‘மனதின் குரல்’ மீண்டும் வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மாத நிகழ்ச்சி வரும் 30-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிக்கான உங்கள் யோசனைகளையும், உள்ளீடுகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறேன்.

உங்கள் கருத்துகளை MyGov Open Forum, NaMo App-ல் எழுதுங்கள், அல்லது 1800 11 7800 என்ற எண்ணில் பதிவு செய்யுங்கள்.”

என்று மோடி தெரிவித்துள்ளார்.