ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூரில் ஓட்டுனர் இல்லாத வண்டி தீப்பிடிட்த்த நிலையில் சாலையில் ஓடியம்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஜெய்ப்பூர் சோடாலா சப்ஜி மண்டி பகுதியில் உள்ள உயர்மட்ட சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார்.

ஆயினும் அந்த கார் தீப்பற்றியபடி நகரத் தொடங்கியது. வாகன ஓட்டிகள் பீதி அடைந்து கார் தங்களை நோக்கி வருவதை பார்த்த அவர்கள் தங்கள் வாகனங்களை வேகமாக நகர்த்தி வழிவிட்டனர்.

இவ்வாறு தீப்பிழம்புடன் புகையை கக்கியபடி சென்றுகொண்டிருந்த கார், பாலத்தின் மறுபகுதி வரை சென்று டிவைடரில் மோதி நின்றது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கார் சென்ற போது அந்த சாலையில் குறைந்த அளவிலேயே வாகனங்கள் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.