மராவதி

ந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திண்ணிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில்,

 “ஒரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதோ அல்லது ஒரு மொழியை குருட்டுத்தனமாக எதிர்ப்பதோ நமது  தேசிய மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பின் நோக்கத்தை அடைய உதவாது. இந்தியை மொழியை நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை. திணிப்பை மட்டுமே எதிர்த்தேன்.

புதிய தேசிய கல்விக் கொள்கையில்  இந்தியை திணிக்காதபோது, ​​திணிக்கப்படுவதாக தவறான கதைகளைப் பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவர்கள் வெளிநாட்டு மொழியுடன் எந்த இரண்டு இந்திய மொழிகளையும் (அவர்களின் தாய்மொழி உட்பட) கற்றுக்கொள்ளாம்.

அவர்கள் இந்தி படிக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, அஸ்ஸாமி, காஷ்மீரி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, சிந்தி, போடோ, டோக்ரி, கொங்கனி, மைதிலி, மெய்தி, நேபாளி, சந்தாலி, உருது அல்லது வேறு எந்த இந்திய மொழியையும் தேர்வு செய்யலாம்.

பல மொழி கொள்கை மாணவர்களுக்கு விருப்பத்தேர்வுகளை வழங்கவும், தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கவும், இந்தியாவின் வளமான மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசியலுக்காக இந்தக் கொள்கையை தவறாகப் புரிந்துகொண்டு நான் எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகக் கூறுவது புரிதலின்மையை பிரதிபலிக்கிறது.  ஒவ்வொரு இந்தியருக்கும் மொழியியல் சுதந்திரம் மற்றும் கல்வித்  தேர்வு  என்ற கொள்கையில் ஜனசேனா கட்சி உறுதியாக நிற்கிறது”

என்று பதிவிட்டுள்ளார்