சென்னை

சி வேலை செய்யாததால் பயணிகள் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர்.

தினமும் இரவு 10 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இரவு 10 மணிக்கு வழக்கம்போல் சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை புறப்பட சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் தயாராகி அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் அமர்ந்திருந்தனர்.

ரயிலில்  2-ம் வகுப்பு ஏ.சி பெட்டியில் இருந்த ஏ.சி எந்திரம் வேலை செய்யவில்லை. தொடர்ந்து புழுக்கம் அதிகரித்ததால் பயணிகள் அங்கிருந்த ஊழியர்களிடம் புகார் அளித்தனர்., யாரும் கண்டுகொள்ளாத நிலையில் ரயில் புறப்படத் தயாரானது.

அப்போது, பயணி ஒருவர் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்., ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே அதிகாரிகள் 2-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு ஓடிவந்தனர்.  அங்கு ரெயில்வே அதிகாரிகளுடன், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஏ.சி இயங்காதது குறித்து ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் சரிசெய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். உடனடியாக ஏ.சி எந்திரத்தை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப ஊழியர்கள் ஈடுபட்டு பழுது சரிசெய்யப்பட்டு 55 நிமிடம் தாமதமாக இரவு 10.55 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. எனவே சென்டிரல் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.