பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் அதகளம் செய்து வருகின்றனர். நேற்று (7வது நாள் போட்டி) நடைபெற்ற  வில்வித்தை. கிளப் த்ரோவில்  இந்திய வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் இந்தியா அணி இதுவரை 24 பதக்கங்களை பெற்றுள்ளது.

பாரா ஒலிம்பிக்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஜொலிக்காத நிலையில், தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் அதகளம் செய்து வருகின்றனர்.

இந்திய நேரப்படி நேற்றி நள்ளிரவு  தொடர்ந்து, இன்று அதிகாலைவரை  நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள்  தங்கம் வென்று அசத்தி உள்ளனர்.

வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் போலந்தின் லூகாஸ் சிஸ்ஜெக்கை என வீரரை  எதிர்கொண்டார். இதில் ஹர்விந்தர் 6-0 (28-24, 28-27, 29-25) என போலந்து வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார்.

இதன்மூலம் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.  இவர் ஏற்கனவே டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார்.

அதன்பிறகு  நடைபெற்ற க்ளப் த்ரோ (F51) போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் கிடைத்தது.  தரம்பீர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான பிரனாவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் இந்தியா  5 தங்கம்,  9 வெள்ளி, 10 வெண்கல பதக்கம் என 24 பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும்  இந்தியாவுக்கு  4 பதக்கங்கள் கிடைத்துள்ளது.