பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும்  பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4 வது பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே 3 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று  4வது பதக்கத்தை வென்றது இந்தியா.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும்.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லேகரா தங்கப் பதக்கமும் மோனா அகர்வால் வெள்ளிப்பதக்கம் வென்றனர். தொடர்ந்து,   பெண்களுக்கான 100 மீ ஓட்டப்பந்தய இறுதிப்போட்டியில் 14.21 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இந்திய வீராங்கனை பிரீத்தி பால் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இந்த நிலையில்,  ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவின் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பாரீஸ் 2024 பாராலிம்பிக்ஸில் வெள்ளிக்கிழமை P1 ஆண்களுக்கான 10m ஏர் பிஸ்டல் SH1 துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மணீஷ் நர்வால் 234.9 மதிப்பெண்களுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2024 பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு இது நான்காவது பதக்கம்!

ஏற்கெனவே 1 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதன் காரணமாக இந்தியா 4வது பதக்கத்தை பெற்றுள்ளது.