டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை நெருங்கிய வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், உலக சாம்பியனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இவர், போகத் தங்கப்பதக்கத்தை பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தன. இந்த நிலையில், அவரை பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி திடீரென தகுதி நீக்கம் செய்து அறிவித்து உள்ளது.

வினேஷ் போகத் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இது இந்திய ரசிசர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் மல்லியுத்த  போட்டிகளில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அபாரமாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதுவரை எந்த இந்தியப் பெண் மல்யுத்த வீரரும் எட்டாத பீடத்தை வினேஷ் போகத் எட்டினார்.  இன்று அவர் இறுதிப்போட்டியில் இன்று  மாலை விளையாட இருந்தார். இந்த நிலையில்அவரை ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்துள்ளது.

50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய வீராங்கனை  வினேஷ் போகத் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் கமிட்டியின் இந்த அறிவிப்பு காரணமாக,   50 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தை அமெரிக்க வீராங்கனை கைப்பற்றினார்.

நடப்பு ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை எந்த தங்கமும் வெல்லவில்லை. இந்த சூழலில், மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நேற்று அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

50 கிலோ எடைப்பிரிவு போட்டி என்பதால் எடை ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், அவர் 50 கிலோவிற்கும் அதிகமாக எடை இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, அவர் நேற்று இரவு முழுவதும் கண் விழித்து தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். ஆனாலும், அவர் 50 கிலோவை காட்டிலும் 100 கிராம் எடை அதிகளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நாள் முழுவதும் உடற்பயிற்சி செய்து 2கிலோ எடையை ஒரே இரவில் குறைத்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் இரவு முழுவதும் சைக்கிளிங், ஸ்கிப்பிங் என பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும், அவர் குறிப்பிட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. மல்யுத்த விதிப்படி போட்டி நடைபெறும் நாள் மற்றும் போட்டிக்கு முந்தைய நாள் போட்டி நடக்கும் எடை அளவிலே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் வரலாற்றிலே மகளிர் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தய வீராங்கனை என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்திருந்தார். ஜப்பான் வீராங்கனை யூய் சுசாகி, உக்ரைன் வீராங்கனை மற்றும் கியூபா வீராங்கனை என அடுத்தடுத்து மிகப்பெரிய வீராங்கனைகளை வீழ்த்தி வினேஷ் போகத் முன்னேறினார். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எடை அதிகரிப்பு காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது இந்திய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.