சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தஞ்சை, புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை தேனி, திண்டுக்கல், கோவை, கரூர், மதுரை, திருச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

என்று தெரிவித்துள்ளது.