சென்னை; ஓபிஎஸ்-க்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சளி, இருமலால் பாதிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ்க்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், லேசான அறிகுறிகளுடன் ஓபிஎஸ் தனி வார்டில் சிகிச்சை பெறுகிறார். தற்போது ஓபிஎஸ்-ன் உடல்நிலை சீராக இருப்பதாகவம், மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel