டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் இருந்து இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது ராகுல்காந்தி, ராகுல் அரசியல் ரீதியாக அல்ல, அரசியலமைப்பைக் காப்பாற்ற போராடுங்கள் என்றுகூறினார்.

முன்னததாக, எம்.பி.க்களின் பேரணிக்கு டெல்லி காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என கூறி காவல்துறையினர், அவர்களை சாலையில், தடுப்பு வைத்து தடுத்து நிறுத்திய நிலையில், அவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர்.
பீகாரில் 65லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலத்தில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி. அவரது குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்றனர். தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல்காந்தி தலையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வாக்கு திருட்டு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி 300 எம்.பி.க்கள் ஒரு கி.மீ. தூரம் பேரணி நடத்தினர். அந்த பதாதைகளில், ஆங்கிலம், இந்தி, தமிழ், வங்காளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பிஹாரில் நடைபெறு சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்கு திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாகைகள் ஏந்திச் சென்றனர். பல எம்.பி.க்கள் அணிந்திருந்த வெள்ளை தொப்பியில், ‘SIR’ மற்றும் “vote chori” என்ற வார்த்தைகளில் சிவப்பு சிலுவை இடம் பெற்றிருந்தது. பீகாரில் SIR பயிற்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்ட எம்.பி.க்கள் பேரணியில் 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்ற்னர்.
காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர். திமுக சார்பில் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியாக சென்ற எம்.பிக்களை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது.
இதைத்தொடர்ந்து எம்.பிக்களுடன் டெல்லி காவல்துறை பேச்சு வார்த்தை நடைபெற்றது. . இதற்கிடையே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஆனால், பேரணி செல்ல முறையான அனுமதி பெறவில்லை என கூறி, இந்தப் பேரணிக்கு டெல்லி போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

இதையடுத்த, அவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கேசி வேணுகோபால் . பிரியங்கா காந்தி உள்பட போராடிய எம்.பி.க்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை போலீசார் கைது செய்தனர். பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால், சஞ்சய் ராவத், அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, மஹிபூபா மொய்த்ரா, தமிழ்நாட்டைச் சேர்ந்த கனிமொழி தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி உள்ளிட்ட எம்பிக்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எம்.பி.க்கள் பேருந்தில் ஏற்றியபோதும் பேருந்துக்குள்ளும் எம்பிக்கள் முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.