ஹார்வர்ட்

மெரிக்க அதிபர் டிரம்ப் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்தற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது,

உலகளவில் புகழ்பெற்ற அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடைவிதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வன்முறை, யூத எதிர்ப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய நபர்களை பல்கலை. வளாகத்தில் ஒருங்கிணைப்பது ஆகியவற்றுக்கு நிர்வாகமே பொறுப்பு என அந்நாட்டின் உள்துறை செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனவும், இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2024-2025 கல்வியாண்டில் கிட்டத்தட்ட 6,800 சர்வதேச மாணவர்களைச் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சேர்த்துள்ளது. இது அதன் மொத்த சேர்க்கையில் 27% ஆகும். ஒவ்வொரு ஆண்டும், 500-800 இந்திய மாணவர்கள் மற்றும் வல்லுநர்கள் ஹார்வர்டில் படிக்கிறார்கள்.  தற்போது, ​​இந்தியாவிலிருந்து 788 மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகதாகும்.