ட்டி

ட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக பெய்தது. நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே சிறு, சிறு மண் சரிவு மற்றும் ரயில் பாதை ஓரத்தில் அருவிகள் தோன்றி தண்டவாளத்தை மறைத்தபடி தண்ணீர் ஓடியது.

எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கடந்த 16 மற்றும் 17 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழை அளவு குறைந்தது. மேலும் தண்டவாளத்திலும் தண்ணீர் வடிந்தது.

ஆகவே மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த அறிவிப்பால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.