ஸ்ரீநகர்

டந்து மூடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் 3 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில்  நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் போன்ற காரணங்களால், ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியது. இங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து வாக்குகள் நேற்று (அக். 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ஆரம்ப கட்டத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் இழுபறி இருந்தாலும் பிற்பகலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையானதை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இங்குள்ள 90 தொகுதிகளில், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்த இந்தியா கூட்டணி 48 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதர கட்சிகள் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

9 ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 41 பெண்கள் போட்டியிட்டதில் 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்., ஜம்மு பிராந்தியத்தில் பாஜகவை சேர்ந்த ஷகுன் பரிஹார் என்ற பெண் உறுப்பினர், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த ஷமிமா பிர்தௌஸ் மற்றும் சகினா இடூ ஆகிய 2 பெண்களும் வெற்றி பெற்றுள்ளனர்.  மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் இது வெறும் 3.33% மட்டுமே ஆகும்.