காரப்பறம்பு

கேரள மாநிலம் காரப்பரம்பு பகுதியில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பி எ எம் என சுருக்கமாக கூறப்படும் முதன்மை அமீபிக் மெனிங்கோ-என்செபாலிடிஸ், என்பது யூகாரியோட் நெக்லேரியா ஃபோலேரி மூலம் மூளையில் ஏற்படும் அபாயகரமான தொற்று ஆகும். இந்த தொற்றிஆல் தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்.

ஒரு மூன்றரை வயது சிறுவனுக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த இரு மாதங்களில் இரு சிறுமிகளும், ஒரு சிறுவனும் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு பலியான நிலையில், மேலும் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மேலும் ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.   இங்குள்ள காரபறம்பு பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.