ரேவா

த்திய பிரதேசத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சைபர் கிரைம் மோசடியில் சிக்கி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்/

சரோஜ் துபே (65) என்னும் முதியவ்ர்  ம்த்​திய பிரதேசம் ரேவா நகரைச் சேர்ந்​தவர் ஆவார். பள்ளி காவலா​ளி​யாக வேலை​பார்த்து ஓய்வு பெற்​ற இவருக்கு ஜூலை 1-ம் தேதி அடை​யாளம் தெரி​யாத எண்​ணிலிருந்து அழைப்பு வந்​தது. அதில் பழங்​கால நாணய நிறு​வனத்​தின் பிர​தி​நிதி என்று கூறிக்​கொண்டு அலங்​கார மற்​றும் பாரம்​பரிய நோக்​கங்​களுக்​காக அரசு பழங்​கால நாண​யங்​களை வாங்​கு​வ​தாக​வும் அதற்கு லட்​சக்​கணக்​கில் பணம் கொடுப்​ப​தாக​வும் ஆசை காட்​டி​யுள்​ளார்.

இதை நம்பி தான் வைத்​துள்ள பழங்​கால நாண​யங்​களின் படங்​களை சைபர் மோசடி நபருக்கு துபே அனுப்​பி​யுள்​ளார். இவற்றுக்கு ரூ.66.75 லட்​சம் வழங்​கு​வ​தாக​வும் செய​லாக்க கட்​ட​ண​மாக ரூ.520 செலுத்​து​மாறும் அந்த மோசடி கும்​பல் துபே​யிடம் கூறி​யுள்​ளது. எனவே துபே பணம் செலுத்​தி​யதும் அந்த மோசடி கும்​பல் பரிசு பணம் நிரம்​பிய பைகளின் வீடியோ, சான்​றிதழ் ஆகிய​வற்றை துபே​யின் வாட்​ஸ்​அப் எண்​ணுக்கு அனுப்​பி​யுள்​ளது.

இதனால் சந்​தோஷம் அடைந்த துபே​யிடம் வரி மற்​றும் ஜிஎஸ்டி கட்​ட​ணம் செலுத்த மேலும் பணம் வேண்​டும் என மோசடி கும்​பல் கூறியதையடுத்து உறவினர், நண்​பர் என பலரிடம் கடன் வாங்கி ஆறு பரிவர்த்​தனை​கள் மூல​மாக ரூ.37,000 அனுப்பி வைத்​துள்​ளார். ஆனால் மேலும் ரூ.10,000 டெபாசிட் தொகை செலுத்த கோரியபோது​தான் அவரது மனைவி நிர்​மலா​வுக்கு இந்த விஷ​யம் தெரிய​வந்​தது.  தாம் ஏமாற்​றப்​பட்​டதை அறிந்து  இதனால் மனம் உடைந்த துபே தனது தந்தை உரிமம் வாங்கி வைத்த துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்​டார். இது மத்தியப் பிரதேசத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.