தராபாத்

ந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியில் வீட்டில் ஒரு பகுதியை அதிகாரிகள் ஜேசிபி  எந்திரத்தின் மூலம் இடித்துள்ளனர்.

சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில், ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு இது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது  அந்திராவில் மொத்தமுள்ள 175 இடங்களில் வெறும் 11 தொகுதிகளை மட்டுமே வென்றதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

ஐதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடான ‘தாமரை குளம் இல்லம்’ அமைந்துள்ளது. ரெட்டி முதல்வராக இருந்ததால் அவரது வீட்டின் காம்பவுண்டு சுவரை ஒட்டி பாதுகாப்பு காவலருக்கு என அமைக்கப்பட்டு இருந்த  கட்டுமானம் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டுக்கு முன்புறம் தரை ஓடுகள் பதிக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. எனவே ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் கட்டப்பட்டிருந்த அந்த சட்ட விரோத கட்டுமானங்களை அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.

பலத்த பாதுகாப்புடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த கட்டுமானத்தை அதிகாரிகள் இடித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகள் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த கட்டுமானங்களை இடித்து அகற்றிய சம்பவம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.