சென்னை:  “தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றியபோது,  தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்றவர்,   SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது, அதனால் அவர்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும் என்று கூறினார்.

இன்று நாம்,   இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறியதுடன்,   பா.ஜ.க.வின் வாக்குத்திருட்டு குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி உள்ளார் என்றவர்,  தமிழ்நாட்டில் SIR பணிகளை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது என்று கூறியதுடன்,   மக்களின் வாக்குரிமையை பெற்றுத்தரும் பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது என்றார்.

ஏற்கனவே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தி.மு.க. கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றவர்,  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில்  திமுக முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றதுடன்,   SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  தமிழ்நாட்டில் உரிய கால அவகாசம் இல்லாமல் SIR பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என குற்றம் சாட்டியவர்,   SIR படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க. பாக முகவர்கள் உதவி செய்ய வேண்டும் என்றவர், இந்த விஷயத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்க மாநிலமும்,  உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துகிறது என்றார்.

மக்களை சந்திக்க தெம்பில்லாமல் SIR என்ற குறுக்கு வழியை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது என்று விமர்சித்த ஸ்டாலின்,  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க. உச்சநீதிமன்றம் சென்றது வெட்கக்கேடு என சாடியதுடன்,   தமிழகத்தில் இருக்கும் எதிர்க்கட்சி தற்போது எதிர்க்கட்சியாக இல்லை என்றும்,  அ.தி.மு.க.வை டெல்லியில் அடகு வைத்துவிட்டு SIR-ஐ ஆதரித்து பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.