கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பட்டப்பகலில் சாலையில் நடந்துசென்ற இளம்பெண்ணை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

கோவையில் பட்டப்பகலில், ஒரு இளம் பெண் ஒருவரை காரில் வந்த கும்பல் வலுக்கட்டாயமா, அவரின் அலறலை மீறி காரில் வேகமாக கடத்திச் சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரியின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கோவையில் அடுத்தடுத்து இளம் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில் சாலையோரம் சென்றுகொண்டிருந்த பெண்ணை, நேற்று மாலை வெள்ளை நிற காரில் வந்த சிலர், வலுகட்டாயமாக இழுத்துக் காரில் ஏற்றிச் சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் உடடினயாக , சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு உடனடியாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், பெண் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? யார் அந்த இளம் பெண்? அந்தக் கார் எங்கு சென்றது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில், காரில் இருந்த பெண் அலறும் சப்தம் கேட்கிறது. பின்னர் வேகமாக அந்த காரை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதையடுத்து அந்த காரை தேடும் பணி தீவிரப்படத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு பின்புறம், கல்லூரி மாணவியை மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, தமிழகம் – கேரளம் எல்லையான வாளையார் பகுதியில் இளம்பெண்ணை மிரட்டி பணம், நகை பறித்த சம்பவமும் மக்களிடையே அதிர்ச்சியை அளித்த நிலையில், தற்போது இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.