ஜுன்ஜுனு

ராஜஸ்தானில் பெய்து வரும் கனமழையால் புதிய சாலை ஒன்று திறப்பு விழாவுக்கு முன்பே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்துள்ள, ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள பகோலி-ஜாஜ் சாலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. தற்போது ஜுன்ஜுனு மாவட்டத்தி கனமழை பெய்து வருகிறது. எனவே அப்பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.

கன்மழை மற்றும் வெள்ளத்தால் புதிதாக அமைக்கப்பட்ட சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் சுமார் 30 முதல் 35 அடி ஆழம் கொண்ட பள்ளம் உருவாகியுள்ளதை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.

அந்த பதிவில் மக்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் தான், திறப்பதற்கு முன்பே புதிய சாலை அடித்துச்செல்லப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த பகுதியில் இச்சம்பவம் கடும் பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.