சென்னை:  உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவர்  தமிழ்நாடு மாநில பாஜகவின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் குடும்பம் சென்னையில் உள்ளது. அவர் சென்னை வந்திருந்த நிலையில்,  பாத்ரூமில் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து,  அவரது குடும்பத்தினர் அவரை  ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாகாலாந்து மாநிலத்தின் தற்போதைய ஆளுநராக இருந்து வருபவர் இல. கணேசன் (iLa. Ganeshan, தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் 1945ம் ஆண்டு 16ம் நாள் பிறந்தவர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பிரச்சாரகராக இருந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும் தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேரச் பணியாளராக இருந்து வந்தார். பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் கட்சியின் தேசிய செயலராகவும், கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் பணியாற்றியவர். பின்னர் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 1991 இல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

ஆகஸ்டு 22, 2021 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களால் 17வது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பிப்ரவரி 20, 2023 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரு. திரௌபதி முர்மு அவர்களால் 19வது நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.