மும்பை

காராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நேற்றிரவு மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அவருக்கு இதயம், தமனிகளில் அடைப்புகள் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2012ம் ஆண்டு உத்தவ் தாக்ரேவுக்கு இதய தமனிகளில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு இதயத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டிருந்தது. பிறக் 2016ம் ஆண்டும் இதேபோல ஆஞ்சியோ செய்யப்பட்டது. கடந்த 12ம் தேதி தசரா விழாவில் அவர் பங்கேற்ற பிறகு அவருக்கு திடீர் உடல் நலப்பிரச்னை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மொத்தம் 288 இடங்களைக் கொண்ட மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் உத்தவ் தாக்கரே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மும்பஒ

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நேற்றிரவு மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அவருக்கு இதயம், தமனிகளில் அடைப்புகள் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2012ம் ஆண்டு உத்தவ் தாக்ரேவுக்கு இதய தமனிகளில் அடைப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு இதயத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டிருந்தது. பிறகு 2016ம் ஆண்டும் இதேபோல ஆஞ்சியோ செய்யப்பட்டது. கடந்த 12ம் தேதி தசரா விழாவில் அவர் பங்கேற்ற பிறகு அவருக்கு திடீர் உடல் நலப்பிரச்னை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொத்தம் 288 இடங்களைக் கொண்ட மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் உத்தவ் தாக்கரே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.