நியூயார்க் அரசு அலுவலகத்தில் ஐடி துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் மற்றொரு நிறுவனத்தில் (மூன்லைட்டிங்) பார்ட் டைமாக பணியாற்றிய 39 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மெஹுல் கோஸ்வாமி என்ற அந்த நபர் முறைசாரா வகையில் வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்தது வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவது வரி செலுத்துவோரை $50,000 (₹43 லட்சம்) மோசடி செய்வதற்குச் சமம் என்று சரடோகா கவுண்டி ஷெரிப் அலுவலகம் கூறியுள்ளதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நியூயார்க் அரசு அலுவலகத்தில் மெஹுல் வீட்டிலிருந்து வேலை செய்தார். இதுவே அவரது முதன்மை வேலை. இருப்பினும், அதே நேரத்தில், அவர் 2022 முதல் மால்டாவில் உள்ள குளோபல்ஃபவுண்டரிஸ் என்ற குறைக்கடத்தி நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தார். இது ‘மிகப்பெரிய தேசத்துரோகம்’ என்று கூறப்படுகிறது.
அரசு அலுவலகத்திற்கு மெஹுல் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட ஒரு அநாமதேய மின்னஞ்சல் மூலம் அவர் ஒரு அரசு ஊழியராகப் பணிபுரிய வேண்டிய நிலையில், அவர் ஒரு தனியார் நிறுவனத்திலும் பணிபுரிகிறார் என்பது தெரியவந்தது.
“அரசு ஊழியர்கள் தங்கள் வேலைகளை அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்துடன் செய்வதாக உறுதியளிக்கிறார்கள். ஆனால் மெஹுல் கோஸ்வாமி அந்த நம்பிக்கையை உடைத்துவிட்டார். அவர் நம்பிக்கை துரோகம் செய்து, வேறொரு நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி வரி செலுத்துவோரின் பணத்தை ஏமாற்றியுள்ளார்” என்று CBS6 செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோஸ்வாமி அக்டோபர் 15 அன்று கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை காரணமாக அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மெஹுல் 2024 ஆம் ஆண்டில் அரசு வேலையில் இருந்து $1.17 லட்சம் (₹1.03 கோடி) சம்பாதித்தார்.
[youtube-feed feed=1]