யநாடு

பிரபல நடிகர் மோகன்லால் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுத்ல் தெரிவித்துள்ளார்.

இத்வரை வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. இங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் விக்ரம், சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் கேரள முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினர். மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் அவரது மகன் நடிகர் துல்கர் சல்மான் இணைந்து ரூ.35 லட்சம் நன்கொடை அளித்தனர். பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கிய நடிகர் மோகன்லால், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று மேப்பாடி பகுதிக்கு சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள், காவல்துறையினர், மீட்புக் குழுக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் இடைவிடாத முயற்சிகளை அவர் பாராட்டியுள்ளார்.

அப்போது மோகன்லால் செய்தியாளர்களிடம்.

”நாம் இதுபோன்ற சவாலான காலங்களில் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும், துன்பங்களை எதிர்கொண்டாலும், நாம் எப்போதும் பலமாக வெளிப்பட்டிருக்கிறோம். இந்த சவாலான காலங்களில் நாம் ஒற்றுமையாக இருப்போம், நமது உறுதியை வெளிப்படுத்துவோம்”

என்று தெரிவித்துள்ளார்.