டில்வி

மார்ச் 3 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அடுத்த மாதம் மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மார்ச் 3 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள சாணக்யபுரி தூதரக வளாகத்தில் அமைந்துள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அவ்வப்போது அரசாங்கத்தின் நிர்வாகம், கொள்கை விவகாரங்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப் பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டங்களை நடத்தி வருகிறார்., தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.