வாஷிங்டன்

ரும் 21 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் குவாட் அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார்,

 

குவாட் அமைப்பை அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ஏற்படுத்தி உள்ளன. இந்த குவாட் அமைப்பின் 2024-ம் ஆண்டு மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  தற்போது இந்த ஆண்டு மாநாடு இந்தியாவுக்கு பதிலாக அமெரிக்காவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி காலம் முடிவடைவதால் அவர் மாநாட்டை தலைமை தாங்கி நடத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா இதற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து வருகிற 21-ந்தேதி ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவேர் வில்மிங்டனில் குவாட் உச்சிமாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் ஜோ பைடன். மோடி, ஆஸ்திரேலியா பிரதமர். ஜப்பானிய பிரதமர் ஆகியோர் பங்கேற்கிறார்கள். பிரதமர்  மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஐ. நா. பொதுச் சபையின் அமர்வு கூட்டத்தில் பங்கேற்பதற்ற பின் அமெரிக்காவில் நடக்கும் குவாட் மாநாட்டில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்தியாவில் இந்த ஆண்டுக்கு பதில் அடுத்த ஆண்டு குவாட் உச்சி மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.