சென்னை

கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஆண்டவர் மறைவுக்கு மு க ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென கத்தோலிக்க திருச்சபையின் தலைவரா போப் பிரான்சிஸ் (வயது 88) க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுடாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் இன்று காலமானார்.

ரோம் நேரப்படி காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது.  போப் ஆண்டவர் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,

”கத்தோலிக்க திருச்சபையை பச்சாதாபம் மற்றும் முற்போக்கான மதிப்புகளுடன் வழிநடத்திய, மாற்றத்தை ஏற்படுத்தும் நபரான போப் பிரான்சிஸின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

போப்பாண்டவராக பணிவு, தார்மீக தைரியம் மற்றும் ஆழ்ந்த பச்சாதாப உணர்வைக் கொண்டு வந்த, இரக்கமுள்ள மற்றும் முற்போக்கான குரலாக அவர் இருந்தார். ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான அவரது வாதங்கள் கத்தோலிக்க உலகிற்கு அப்பாலும் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன.

அவர் விட்டுச் சென்ற மரபு, செயலில் இரக்கம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை”

என்ரு பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,

“புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமை என்ற செய்தியால் லட்சக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்துவிட்டது.

உலகம் முழுவதும் உள்ள அவரது அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும்”

என்று இரங்கல் தெரிவித்துள்ளார்/

[youtube-feed feed=1]