வேலுர்: உடல்நலம் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக வேலூர் சிஎம்சியில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் திமுக தென்மண்டல பொறுப்பாளருமான  மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் செய்யப்பட்டார்.

 முன்னாள் மத்திய இணை அமைச்சரும்,  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, இவர் உடல்நலம் பாதிப்பு காரணமாக, சென்னை அப்போலோவில் சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காகக  கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை, உயர் ரக சிகிச்சை அளிக்கக்கூடிய வார்டில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.   24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட்டு வருவதாக கூறப்பட்டது. மேலும், அவருக்கு பிசியோதெரபி உள்பட பல்வேறு இணை சிகிச்சைகளும் வழங்கப்பட்டுவந்தது.  அவருடன்   தந்தை மு.க.அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து அவரை கவனித்து வந்தனர்.

இதற்கிடையில், க டந்த மே 8ஆம் தேதி வேலூருக்கு வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், துரை தயாநிதிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவையும் நேரில் சந்தித்து, அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த நிலையில், துரை தயாநிதியின் உடல்நலம் தேறியது. அதைத்தொடர்ந்து, அவர் இன்று (செப்டம்பர் 24)   வேலூர் சி.எம்.சி மருத்துவமனை யில்   டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை அவரது தந்தை மு.க.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை  அழைத்துச் சென்றனர்.