சென்னை

னமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினர் ஆறுதல் அளிக்கக் கூட செல்லவில்லை என அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.

சென்னையில் தமிழக அமைச்சர் சேகர் இன்று செய்தியாளர்களிடம்,

“தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அனைவரும் விளையாட்டுப் பிள்ளை என்றே நினைத்தார்கள். களத்தில் யார் எதிர்த்து நின்றாலும் வெற்றி தனக்கே சொந்தம் என்பதுபோல் இன்று தமிழக அரசியல் களத்தில் உதயநிதி ஸ்டாலின் உலாவிக் கொண்டிருக்கிறார்.

அதே வேளையில்  தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, எங்காவது ஒரு இடத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டாரா?

தற்போது சென்னையில் அ.தி.மு.வைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். ஆயினும்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட அ.தி.மு.க.வினர் எங்கும் செல்லவில்லை.”

என்று தெரிவித்துள்ளார்.