கோவை: நடப்பு கல்வியாண்டில், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு  தேதிகள் குறித்த தேர்வு அட்டவணையை  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அத்துடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகளையும் அறிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்   அன்பில் மகேஸ்  10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை  வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  அடுத்தாண்டு மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும், பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்.7ல் தொடங்கி 14ஆம் தேதி முடிவடையும் என்றார்.

பிளஸ் 1 பொதுத் தேர்வு  அடுத்தாண்டு மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரைநடைபெறும் என்று செய்முறைத் தேர்வு பிப்.15ல் தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என்றரர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2025ம் ஆண்டு  மார்ச் 28ல் தொடங்கி ஏப்.15ஆம் தேதி வரை நடைபெறும். செய்முறைத் தேர்வு பிப்.22 தொடங்கி பிப்.28ஆம் தேதி வரை நடைபெறும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதியும், பிளஸ் 1, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதியும் வெளியிடப்படும்.

தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதால் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.