நடிகை மீனா அவ்வை சண்முகி திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவுப்பெற்றுள்ளது என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்பு அனைவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகியாக வலம் வந்தவர்.

மலையாளத்தில் மோகன் லாலுடன் இவர் இணைந்து நடித்த த்ருஷ்யம், த்ருஷ்யம் 2 ஆகிய இரண்டு படங்களுமே மிகுந்த வெற்றிப் பெற்றது.

சமீபத்தில் ரஜனிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திலும் நடிகை மீனா நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை மீனா நெகழ்ச்சியான தருணம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் ‘அவ்வை சண்முகி திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ளது. இந்த தலைசிறந்த படைப்பை நாங்கள் படமாக்கிய அற்புதமான நேரத்தை நினைவு கூர்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CWGHR9WvYBW/