டெல்லி: 12 மாநிலங்களில் நடைபெற்ற தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்ததிற்கு (SIR, Special Intensive Revisio) பிறகு, 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 6.56 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த மாநிலங்களில் மொத்தமுள்ள வாக்காளர்களில் 13 சதவிகித வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் 15.18 சதவிகிதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் இரண்டாம் கட்டமாக நடந்த எஸ்ஐஆர் பணிகளில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. இதையடுத்து வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 6.56 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம், உபி., மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், கேரளா, மத்திய பிரதேசம் மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், கோவா, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் திருத்தப்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் 6.56 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது. அதாவது 13 சதவிகித வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.
‘இதன்முலலம், வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெயர் உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்படும். மேலும், போலியான ஆவனங்கள் மூலம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ள அகதிகள், வெளிநாடுகளைச் சேர்ந்த சமூக விரோதிகள் போன்றவர்களை களையெடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தகுதியான வாக்காளர்களை மட்டும் கொண்ட துல்லியமான பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. அதற்காகவே தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் நடைபெற்று வருகிறது.
தற்போது நடைபெற்று தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் முதல்கட்டமாக எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழ்நாடு 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.56 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும், 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதில் பெரும்பாலும் இரட்டைப் பதிவுகள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.t
[youtube-feed feed=1]