திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த ருக்கு என்ற பெண் யானை கடந்த 2018 ம் ஆண்டு இறந்தது.

1995 ம் ஆண்டு 7 வயது குட்டியாக அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த ருக்கு 23 ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலுக்கு வரும் பக்தர்களின் அன்பைப் பெற்றது.

இதனையடுத்து மறைந்த யானை ருக்குவுக்கு ராஜகோபுரம் அதனை அடக்கம் செய்த வடஒத்தவாடை தெருவில் மணிமண்டபம் கட்டவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 49 லட்சம் மதிப்பில் யானைக்கு மணிமண்டபம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த மணிமண்டபம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்த மணிமண்டபத்தை 9 மாதங்களில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]