கொல்கத்தா: பெண் மருத்துவர் பாலியல் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை, தூக்குதண்டனையாக மாற்ற கோரி மேல்முறையீடு செய்யப்போவதாக மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உறுதிஅளித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பணி நேரத்தின்போது, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி சஞ்சய் ராயுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், குள்ளவாளிக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டயை, தூக்குதண்டனையாக மாற்றக் கோரி மேல்முறையீடு செய்யப்போவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவித்து உள்ளார்.
2024ம் ஆண்டு ஆகஸ்டு 8ந்தி அன்று இரவு மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் இரவு நேர பணியில் இருந்த போது , பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தசம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த சூழலில் நீதிமன்றம் தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோச்ஜ், காவல் அதிகாரி அபிஜித் மோண்டல் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் உள்ள சியல்டா மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவர் பிரதான குற்றவாளி தான் என கடந்த 18ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கின் தண்டனை 2025ம் ஆண்டு ஜனவரி 20ந்தேதி அன்று அறிவிக்கப்பட்டது. அதில், குற்றவாளி சஞ்சய் ராய் சாகும் வரை சிறையில் அடைத்து ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை ஏற்க பாதிக்கப்பட்ட மருத்துவரின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இழப்பீடு தேவையில்லை, குற்றவாளி தூக்கிலிடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள னர். அதுபோல மருத்துவர்கள், மருத்துவ மாணவிகளுக்கும், இந்த கொலை விவகாரத்தில் நிதி தேவையில்லை நீதிதான் தேவை என கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் பாலியல் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. அதில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட உள்ளது. குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையாது அரிதும் அரிதானது. ஆனால், இந்த கொடூர கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு என்றும் தெரிவித்துள்ளார்.