டெல்லி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக செய்தியாளர்கள் நாடாளுமன்றத்தின் மகர் துவார் நுழைவு வாயிலில் எம் பி க்களிடம் பேட்டி எடுப்பார்கள்.  இன்று காலை அப்பகுதியில் செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் முன்பிருந்த பல்வேறு அனுமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில், பல்வேறு நிறுவனங்களின் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் எதேச்சதிகார செயல் எனவும் இந்த சர்வாதிகார செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.