கொடுங்கையூர்:  சென்னை பெரம்பூரை அடுத்த கொடுங்கையூரில் வீடு ஒன்றில்  ‘மெத் லேப்’ என்ற பெயரில் மாணவர்கள் இணைந்து,  போதை பொருள் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து 7 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர்  திமுக கவுன்சிலர் மகன் என்பது தெரிய வந்துள்ளது.

 போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த 7 பேரில் 4 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் ஒருவர் வேதியியல் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கிஷோரின் தந்தை கதிரவன் மீஞ்சூர் ஒன்றிய திமுக கவுன்சிலராகவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவர்கள் வீட்டில்,  மெத் லேப் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் ஒன்றிணைத்து படிக்கிறார்கள் என்ற நிலையில்,  அவர்கள் போதை பொருள் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதற்கு மூல காரணமாக இருந்து செயல்பட்டவர்,  எம்எஸ்சி வேதியியல்  படித்த மாணவர் என்பது தெரிய வந்துள்ளது. இவர் வேதியியல் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 4 பொறியியல் மாணவர்கள்,  ரோபோடிக்ஸ் பட்டதாரிகள்  என்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் பெற்றோர்களிடம் இணைந்து படிப்பதாக கூறி  போதை பொருள் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இபோதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு மெட், ரசாயனங்கள் மற்றும் ஆய்வக உபகரணங்களை கைப்பற்றியது. குழுவிற்கு மற்ற நகரங்களுக்கான இணைப்புகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் மூலைக்கு மூலை கஞ்சா உள்பட போதை பொருள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இந்த முறைகேடான செயல்களில் ஆளும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருவதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கொடூங்கையூர் பகுதியில் மாணவர்கள் சிலர் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போதை தடுப்புபிரிவு போலீசார் கொடூங்கையூரில் ஒரு வீட்டில்  திடீரென சோதன நடத்தினர். அப்போது அங்கு மெத் லேப் நடத்தி வந்த 7  இளைஞர்களை மடக்கி பிடித்தவர். அவர்கள் இருந்தஅறையில் நடத்திய சோதனையில்,  அங்கு  இருந்து 250 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கைதானவர்களில் கிஷோர் என்பவர் திமுக கவுன்சிலர் மகன் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும்,  பிரவீன்,  தனுஷ், பிளம்மிங் பிரான்சிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள்  பணம் சம்பாதிக்கும் நோக்கில் ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த அருண் என்பவரிடம் 250 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைனை ரூ. 3 லட்சம் கொடுத்து வாங்கி யுள்ளனர். பின்பு அதனை 1 கிராம் 2000 ரூபாய் வீதம் விற்று வந்துள்ளனர். ஆனால், அவை அனைத்தும் போலியானது என வாங்கியவர்கள் கூறியதால் 4 பேரும் ஏமாற்றம் அடைந்தனர்.  இதனால் தாங்களே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்தனர். பிஎஸ்சி வேதியியல் படிப்பில் பல்கலைக்கழக அளவில் 2022ம் ஆண்டு கோல்டு மெடல் வாங்கிய நண்பரான ஞானபாண்டியனை இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என கிஷோர் கூறியுள்ளார்.

இதனையடுத்து சவுக்கார் பேட்டையில் உள்ள கெமிக்கல் கடையில் போதைப்பொருள் தயாரிக்க தேவையான கெமிக்கல் பொருட்களை வாங்கி வந்துள்ளனர். அதன் பின்னர் பீரவின் வீட்டில் ஆய்வகம் நடத்தி மெத்தம்பெட்டமைன் தயாரிக்கும் முறையை சோதனை செய்தனர். அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூண்டோடு அனைவரையும் கைது செய்துள்ளனர்

தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்தால் பல்வேறு குற்றச்சம்பங்கள் மற்றும் இளைஞர்கள் சீரழிந்து வருகிறது. அதை இரும்புகரம் கொண்டு தடுக்க வேண்டிய முதல்வர், ஒப்புக்கு சப்பானியாக,  போதையின் பாதையில் யாரும் போக கூடாது என்று மன்றாடி கேட்கிறேன். போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட ஒன்றிணைவோம். தமிழகத்தை போதையில்லா மாநிலமாக உருவாக்குவோம் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.