மும்பை

காராஷ்டிராவில் பாஜக தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகி உள்ளார்.

நாட்டில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க.வை பின்னுக்கு தள்ளியது. இங்குள்ள 42 தொகுதிகளில் 9 தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றியது.  காங்கிரஸ் 13 தொகுதிகளையும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) 9 தொகுதிகளையும் , சரத் பவாரின் என்.சி.பி. 8 தொகுதிகளையும் கைப்பற்றின.

பாஜகவின் தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநிலத்தின் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ்,

“நான் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தோல்விக்கு முழுப் பொறுப்பேற்கிறேன். சில இடங்களில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு எனது தவறு. மேலும் அடுத்து சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தவும், குறைபாடுகளை சரிசெய்யவும், எனது அரசாங்க பணிகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு எனது கட்சியின் மேலிடத்தை கேட்டுக்கொள்கிறேன். நான் எனது மூத்தவர்களை சந்தித்து எனது எதிர்பார்ப்புகளை அவர்களிடம் தெரிவிப்பேன்.”

என்று கூறி உள்ளார்.