டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான  கட்டிட பணிகள் 26 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதே வேகத்தில் நடை பெற்றால், 2027ல் முழுமையாக பயன்பாட்டு வரும் என நம்பப்படுகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர்  பிரதாப் ராவ்  பதில் அளித்தார்.

அவர் அளித்த பதிலில், மதுரையில் ரூ.2021.51 கோடியில்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டுமானத்திற்கு தற்போது வரை ரூ.239.27 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.  இந்த  மருத்துவமனைக்கான நிதியை விடுவிப்பதில் எந்த காலதாமதமும் இல்லை, தற்போதுவரை   26 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்துஉள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க  ஜப்பானை சேர்ந்த நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி திட்டத்தை 2026 அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.