டெல்லி: லோக்சபா தலைவர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லோக்சபா தலைவர் ஓம் பிர்லா நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 19ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராகவுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]