சென்னை: மத்தியஅரசின் முக்கிய பணிகளில்  லேட்டரல் என்ட்ரி முறையில் நேரடி நியமனம் செய்யப்படுவது, சமூக நீதி மீதான நேரடி தாக்குதல் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சீமுபத்தில்  மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி, லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 துணை செயலாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டிருந்தது. மேலும்,  மத்தியஅரசின் முக்கிய பணிகளுக்கு நேரடி நியமனம் மூலம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு ராகுல்காந்தி உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாஜகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம்ெ சய்துள்ளார்.  லேட்டரல் என்ட்ரி முறையில் பணி நியமனம் செய்யப்படுவது, சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதல் என கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள  பதிவில்,

“ சமூகநீதியை நிலைநிறுத்தவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அதன் சரியான அமலாக்கத்தை உறுதிப்படுத்தவும், பின்வரும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

Lateral Entry என்பது சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதலாகும். தகுதிவாய்ந்த SC, ST, OBC மற்றும் சிறுபான்மை அதிகாரிகளின் மேல்நிலையில் தகுதியான வாய்ப்புகளைப் பறிக்கிறது.

மத்திய அரசு இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும். ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டிகளுக்கான பின்னடைவு காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலும் நியாயமான மற்றும் சமமான பதவி உயர்வுகளை உறுதி செய்ய வேண்டும்.

நாங்கள் எப்பொழுதும் எதிர்க்கும் கிரீமிலேயரை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

தற்கிடையில், Creamy Layer-இன் தேக்கநிலை உச்சவரம்பு மேலும் தாமதமின்றி உயர்த்தப்பட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வரலாற்று ரீதியாக உரிமை மறுக்கப்பட்ட நமது சமூகத்தின் அனைத்து பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்க நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு இன்றியமையாதது.”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.