சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் மண்சரிவு ஏற்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமைந்தகரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள நெல்சன் சாம்பெர்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் இதன் அருகில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டு வரும் பள்ளத்தால் ஏற்பட்ட மண்சரிவால் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கூவம் ஆற்றின் கரையில் உள்ள இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக இதில் குடியிருக்கும் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் மிகவும் கலக்கமடைந்துள்ளனர்.

30 ஆண்டுக்கும் மேலான பழமையான இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.