டெல்லி

மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என காங்கிர்ஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

 

தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை விட 32 இடங்கள் குறைவாக அக்கட்சி பெற்றது.

எனவே தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றதால் ஆட்சி அமைத்துள்ளது.

நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

“மோடி தலைமயிலான தற்போதைய மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். இந்த அரசை மக்கள் சிறுபான்மை அரசாக ஆக்கி இருக்கிறார்கள்.  மோடி கூட்டணி அரசு குறித்து பலமுறை விமர்சனங்களை வைத்திருக்கிறார்.  அவர் கூட்டணி அரசில் ஆட்சியாளர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளதையே நான் திரும்பச் சொல்கிறேன்”

என்று கூறி உள்ளார்.