திருவனந்தபுரம்

னமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால் கேரள மீன்வர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம்(INCOIS),

”கேரள கடலோர பகுதிகளில், கடல் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படும், எனவே கேரள கடலோர பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணி முதல், நாளை (புதன்கிழமை) இரவு 11.30 மணி வரை ‘ரெட் அலர்ட்'(சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடல் சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறு படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.,

 கடலோர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், மறு அறிவிப்பு வரும் வரை  மீனவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட யாரும், மறுஅறிவிப்பு வரும் வரை கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் ”

என்று அறிவுறுத்தியுள்ளது.