திருவனந்தபுரம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.

நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் 9வது கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

தற்போது டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொள்ள மாட்டார் என கேரள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்றும், அவருக்கு பதிலாக மாநில நிதி மந்திரி கே.பி.பாலகோபால் செல்ல அனுமதி கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜயன் கடிதம் எழுதியுள்ளதாக கூரப்படுகிறது

மேலும்.மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிக்கப்படுவதற்கு முன்பே முதல்வர் பினராயி விஜயன் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.