டெல்லி

டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி அடைவோம் என்னும் விரக்தியால் வன்முறை செய்து வருவதாக  கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

வரும் 5 ஆம் தேதி அன்று டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.  டெல்லி சட்டாபைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

டெல்லியில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவினாலும் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. எனவே இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று,

“ டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக மோசமான தோல்வியடைந்து வருகிறது. தோல்வி விரக்தியில் இப்போது வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் மீதான பாஜகவினரின் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறோம்”

என்று தெரிவித்துள்ளார்.