ண்டன்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கீர் ஸ்டார்மர் புதிய பிரதமராக உள்ளார்.

நேற்று பிரிட்டனின் நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.

பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் கருத்து கணிப்புக்களில் கூறப்பட்டு இருந்தது.

நேற்று இரவு பிரிட்டன் நேரப்படி 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. துவக்கம் முதலே கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களுக்கும் மேல் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. கீர் ஸ்டார்மர் தனது சொந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

தொழிலாளர் கட்சி பெரும்பான்மைக்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். தொழிலாளர் கட்சி பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கிறது.

இது பிரக்சிட் எனப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் நாடு வெளியே வந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் ஆகும் ., வாக்குச்சீட்டு முறையில் பிரிட்டனில் தேர்தல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.