உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் வழியாக செல்லும் கவாத் யாத்திரை பாதையில் உள்ள அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் தங்கள் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் மற்றும் அதற்கான QR குறியீடுகளை காட்சிப்படுத்த வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.
கல்வியாளர் அபூர்வானந்த் ஜா மற்றும் பலர் QR குறியீட்டை அமல்படுத்துவதற்கான உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
“செவ்வாய்க்கிழமை காவத் யாத்திரையின் கடைசி நாள் என்று சொல்லப்பட்டுள்ளது.” எப்படியிருந்தாலும், பயணம் முடிவுக்கு வருகிறது.
இருந்தபோதும் ‘அரசாங்கத்தின் உத்தரவைப் பின்பற்றுங்கள்’ என்று கூற வேண்டியுள்ளது” என்று கூறிய நீதிபதிகள் QR குறியீடுகளை காட்சிப்படுத்த வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.