பெங்களுரு

திமுகவுக்கு தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஆதரவு அளிப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்/

வரும் 2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய 7 மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் என தி.மு.க. கூறி வருகிறது.

ஏற்கனவே தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசினார் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாநிலங்களவை எம்.பி. முகமது அப்துல்லா இஸ்மாயில் ஆகியோர் சித்தராமையாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

இதையொட்டி கர்நாடக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தி.மு.க. தலைவர்கள் குழுவுடனான சந்திப்பின்போது, ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் பலவீனப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக சித்தராமையா கண்டனம் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தென் மாநிலங்களின் எதிர்ப்பு குரலை ஒற்றுமையாக வெளிப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது. இதற்கு சித்தராமையா தனது ஆதரவை தெரிவித்ததுள்ளார்

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.