
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பல மாவட்டங்களில் கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. பல இடங்களில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாராமுல்லா, குப்வாரா, பந்திப்போரா ஆகிய பகுதிகள் பனிச்சரிவால் பாதித்துள்ளது. இதில் லடாக் பகுதியில் பட்டாலிக் செக்டாரில் ராணுவ முகாம் உள்ளது. முகாம் மீது பனிக் கட்சிகள் விழுந்ததில் அங்கிருந்த வீரர்கள் இதில் சிக்கினர். மொத்தம் 5 பேர் புதைந்தனர். மீட்புபடையினர் 2 பேரை உடனடியாக மீட்டனர். மேலும் 3 வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Patrikai.com official YouTube Channel